• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இன்று துவகுகிறது 38வது நேஷனல் ஜூனியர் அத்தலடிக் சாம்பியன்ஷிப் போட்டி

November 7, 2023 தண்டோரா குழு

தமிழகத்தின் தொழில் நகரமான கோயம்புத்தூர்,38வது நேஷனல் ஜூனியர் அத்தலடிக் போட்டிகளை நவம்பர் 7 முதல் நவம்பர் 10, 2023 வரை நேரு ஸ்டேடியத்தில் நடத்தத் தயாராகி வருகிறது.

இதுதொடர்பாக கோவையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு அத்தலட்டிக் அசோசியேஷன் செயலர். சி.லதா, கோவை மாவட்ட அத்தலட்டிக் அசோசியேஷன் தலைவர் லீமா ரோஸ், தமிழ்நாடு அத்தலட்டிக் அசோசியேஷன் உப தலைவர் எஸ்.மோகன்தாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சி.லதா,

சமீபத்தில் நேஷனல் ஜூனியர் அத்தலடிக் போட்டிகளை நடத்துவதற்காக புதிய சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் 29 மாநிலங்களில் இருந்து சுமார் 2,200 தடகள வீரர்கள் பங்கு பெறுவார்கள். இதில் தமிழகத்திலிருந்து 175 விளையாட்டு வீரர்கள் (92 ஆண்கள் மற்றும் 83 பெண்கள்) போட்டியிடுகின்றனர் என்றார்.

சாம்பியன்ஷிப் போட்டியில் 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் எட்டு பிரிவுகள் உள்ளன.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முயற்சியால் நேரு ஸ்டேடியம் தற்பொழுது ஒரு புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
கோயம்புத்தூரில் நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா சார்பில் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்கள் பங்கு கொள்கிறார்கள்.

38வது நேஷனல் ஜூனியர் அத்தலடிக் போட்டிகளின் துவக்க விழா இன்று மாலை நடைபெறுகிறது. தமிழக அமைச்சர் எஸ். முத்துசாமி, (வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை) விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பை துவக்கி வைக்கிறார்.

தமிழ்நாடு அத்தலட்டிக் அசோசியேஷன் தலைவர், W.I.தேவாரம், ஐ.பி.எஸ். வரவேற்புரை ஆற்றுகிறார்.அதிலே ஜே. சுமாரிவாலா, (அத்தலட்டிக் இந்தியா ஃபெடரேஷன் – தலைவர்) தலைமையுரை ஆற்றுகிறார். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாட்டி, ஐ.ஏ.எஸ். போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன், ஐ.பி.எஸ்.. மார்ட்டின் குழுமத்தின் லீமா ரோஸ் மார்ட்டின், தமிழ்நாடு அத்தலட்டிக் அசோசியேஷன் உப தலைவர் மோகன்தாஸ் மற்றும் தமிழ்நாடு அத்தலட்டிக் அசோசியேஷன் செயலர் சி.லதா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும் படிக்க