• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வடவள்ளி பகுதியில் கன்று குட்டியை ஈன்ற பசுமாடு கன்று குட்டியுடன் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு

October 25, 2023 தண்டோரா குழு

கோவை வடவள்ளி அடுத்த முல்லை நகர் பகுதியில் கழிவுநீர் சாக்கடையில் சிக்கிய பசுமாடு கன்று குட்டியை ஈன்று, உயிரைவிட்டது தனியாக கத்திய கன்றுகுட்டியை கடித்து கொன்ற நாய்களால் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டது.

கோவை வடவள்ளி அடுத்த முல்லைநகர் பகுதியில், கழிவுநீர் செல்லும் ஓடை உள்ளது, இந்த ஓடையில் நேற்று தெரியாமல் இறங்கிய பசுமாடு, இந்த கழிவு நீரில் சிக்கி கொண்டது, வெளிவர முடியாமல் தவித்த பசுமாடு கன்று குட்டியை ஈன்றது, ஆயினும் அந்த பகுதியில் இருந்து வெளி வர முடியாமல் சிக்கி கொண்ட மாடு உயிரிழந்தது, இதனை தொடர்த்து அந்த பகுதியில் உள்ள நாய்கள் பிறந்த கன்றுக்குட்டியை கடித்து கொன்றது, இதனை இன்று கண்ட அந்த பகுதி மக்கள் இது குறித்து அப்பகுதியின் கவுன்சிலர் சாந்தி சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக விரைந்து வந்த கவுன்சிலர், இது குறித்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், கயிறுகட்டி இறங்கி உயிரிழந்த மாட்டையும் கன்றுக்குட்டியையும் மேலே கொண்டு வந்து மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்,
வடவள்ளி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், மாநகராட்சி மேற்பார்வையாளர் முத்து ராஜ், தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள், உடனடியாக ஜேசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு அதே பகுதியில் குழி தோண்டி பசுமாட்டையும் கன்றுக்குட்டியையும் புதைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க