• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சச்சிதானந்தா ஜோதி நிகந்தன் சர்வதேச பள்ளியில் விளையாட்டு போட்டி – கோவை எஸ்.பி.பங்கேற்பு !

October 4, 2023 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் சச்சிதானந்தா ஜோதி நிகந்தன் சர்வதேச பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் I.P.S. பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (04.10.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், I.P.S. தலைமையில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் IPS.மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

மேலும்,மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில் இன்று ஆண்டு விளையாட்டு போட்டி (Annual Sports Meet) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பத்ரிநாராயணன், I.P.S தலைமையில் நடைபெற்றது. விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கியும், பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் கவிதாசன். ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க