• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரச்சார வாகனம் வாயிலாக சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு

September 29, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் காரமடையில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் பிரச்சார வாகனம் வாயிலாக சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பிரச்சார வாகன துவக்க நிகழ்வில், மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் வெங்கடேஷன், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, வாகனங்களை கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

வேளாண்மை துறை சார்பில் சிறுதானியங்கள் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் முக்கியத்துவம் குறித்து வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பிரச்சார வாகனம் வாயிலாக காரமடையில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாறிவரும் பருவ சூழ்நிலையில், மழை பற்றாங்குறையில் விவசாயிகள் குறைந்த அளவில் நீர் தேவைப்படும் சிறுதானியங்களை பயிர் செய்ய வலியுறுத்தப்பட்டது.

மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், கிராம வேளாண்மை வளர்ச்சி குழு அமைக்கப்பட்டு, குழுவிலுள்ள விவசாயிகளுக்கு கோடை உழவு, பூச்சி நோய் தாக்குதல் தொடர்பான மேலாண்மை பயிற்சி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க