• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘இல்லீகல் மைனிங்’ செய்யாதீங்க – குவாரி சங்கத் தலைவர் கேசிபி சந்திர பிரகாஷ் பேச்சு

September 1, 2023 தண்டோரா குழு

தமிழக கிரசர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் கோவை பீளமேட்டில் நடந்தது.இதில் கோவை, ஈரோடு,திருப்பூர்,கரூர்,பெரம்பலூர், நாமக்கல்,சேலம் மாவட்டங்களை சேர்ந்த கிரசர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

இதில் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் கேசிபி சந்திரபிரகாஷ் கலந்து கொண்டு பேசியதாவது,

குவாரி தொழிலை தூய்மைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த தொழில் செய்பவர்களை கேவலமாக பேசி வருகிறார்கள்.‌ நமது சங்கம் அரசு மற்றும் கனிமவளத்துறையுடன் இணைந்து இந்த தொழிலை தூய்மைப்படுத்தும் வகையில் செயல்பட போகிறது.

முதல் கட்டமாக சங்கத்தை சார்ந்த குவாரி உரிமையாளர்கள் ராயல் டி சீட்டு வாங்கி கனிம பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும்.‌ சட்டவிரோதமாக கனிம பொருட்களை எடுக்கக் கூடாது. 7 மாவட்டங்களில் இதை முறையாக பின்பற்ற வேண்டும்.பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு குவாரிகள் மட்டும் இருக்கிறது. அங்கேயும் இந்த நடைமுறையை முறையாக பின்பற்ற வேண்டும்.

சட்டவிரோதமாக குவாரிகளில் இருந்து கனிம பொருட்களை இன்று முதல் எடுக்கவே கூடாது. அப்படி செய்தால் சங்கம் சார்பில் அரசு மற்றும் கனிமவளத்துறைக்கு புகார் தெரிவிக்கப்படும்.மாநில சங்கத்தின் அறிவுறுத்தல் படி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.சட்டவிரோதமாக கனிம பொருட்களை எடுக்க பயன்படுத்தும் இயந்திரங்களை எடுத்துச் சென்று விடுங்கள். அனுமதி இல்லாமல் சிறு கற்களை கூட எடுக்க கூடாது.

சட்டவிரோதமாக கனிமம் எடுத்தால் அபராதம் மட்டுமல்ல ஜெயிலுக்கு போக வேண்டிய நிலைமையும் வந்துவிடும். அமைச்சர் பொன்முடி மீது கடந்த காலத்தில் அவர் பதவியில் இருந்த போது சட்டவிரோதமாக கனிமம் எடுத்ததாக வழக்கு போட்டார்கள். இப்போதும் அவர் அமைச்சர் இருந்தபோதிலும் வழக்கு அப்படியே இருக்கிறது.

அவருக்கே அந்த நிலை என்றால் நமது தொழில் அதிபர்கள் நிலைமை என்ன ஆகும் என நினைத்து பார்க்க வேண்டும். 100 சதவீதம் நாம் முறையாக அனுமதி பெற்று கனிம பொருட்களை எடுக்க வேண்டும். மீறினால் சங்கம் சார்பில் கனிமவளத்துறையில் புகார் தரப்படும். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

மேலும் படிக்க