• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஜய் மக்கள் இயக்கம் தெற்கு மாவட்டம் சார்பில் சுதந்திர தின விழா

August 15, 2023 தண்டோரா குழு

கோவையில் 77வது சுதந்திர தின விழா விஜய் மக்கள் இயக்கம் தெற்கு மாவட்டம் சார்பாக கோலகலமாக கொண்டாடப்பட்டது.

நாட்டின் 77 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சுந்தராபுரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆணைக்கிணங்க பேரில் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தெற்கு மாவட்டம் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் விக்கி மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் .மணி, பழனியம்மாள் ,ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும. விதமாக அவர்களை கொடியேற்ற வைத்து இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி,பேச்சு போட்டி போன்ற போட்டிகள் நடைபெற்றன.இதில். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனைதொடர்ந்து தெற்கு மாவட்டம் சார்பாக கிணத்துகடவு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அன்னதானம் வழங்க உள்ளதாக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட தலைமை தொண்டரணி தலைவர் கிரிஷ், பயிலகம் ஆசிரியை நாகேந்திரன் உமாமகேஸ்வரி,இளைஞரணி துணை செயலாளர் முகமதுஆஷிக், அமைப்பாளர் செந்தில்குமார், ஆலோசகர் ரோகித், தொண்டரணி பொருளாளர் பிரவீன், இனைசெயலாளர் லோகநாதன், இணையதளம் பாலாஜி, எட்டிமடைபாலு, ஆனந்தராஜ், ரமேஷ் கவிதா, அருண்குமார் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க