• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வ.உ.சி மைதானத்தில் தேசிய கொடி ஏற்றிய மாவட்ட ஆட்சியர்

August 15, 2023 தண்டோரா குழு

நாட்டின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவை வ.உ.சி மைதானத்தில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.பின்னர் கோவை மாநகர,மாவட்ட போலீசார் 109 பேர்,அரசு அலுவலர்கள் 153 பேர், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் 15 பேர், மொழி போராட்ட தியாகிகள் 4 பேர் என மொத்தம் 281 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி,கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,கோவை சரக டிஐ ஜி சரவண சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஷ் சண்முகம் மதிவாணன் சுகாஷினி,மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த தேசபற்றாளர்கள்,பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க