• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சி.எஸ்.ஐ கோவை திருமண்டலத்தின் மூன்றாண்டுகளுக்கான பேராயத்தின் அலுவலர்கள் தேர்வு !

July 29, 2023 தண்டோரா குழு

சி.எஸ்.ஐ கோவை திருமண்டலத்தின் 35 – ஆவது கூடுகை, நீலகிரி மாவட்டம் கேத்தியிலுள்ள சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் 2023 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 – ஆம் தேதி முதல் 25 – ஆம் தேதி முடிய நடைபெற்றது.

இந்தக் கூடுகையை பேராயர் தலைவர் பேரருட் திமோத்தி ரவீந்தர் தொடங்கி வைத்தார்.இந்தக் கூடுகையில் தியானம் , ஜெபம்,பாடல்கள்,பேராயர் மற்றும் திருமண்டல அலுவலர்கள் ஆகியோரின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

2022-2025 மூன்றாண்டுகளுக்கான பேராயத்தின் அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதன்படி
அருள்திரு L. டேவிட் பர்னபாஸ் உப தலைவராகவும்,அருள்திரு S. பிரின்ஸ் கால்வின் கெளரவ செயலாளராகவும், D.S. அமிர்தம் கௌரவப் பொருளாளராகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிகழ்வுகளைத் தொடர்ந்து மூன்று அலுவலர்களும் 25.07.2023 அன்று நடைபெற்ற ஆராதனைக் கூட்டத்தில் பேராயரால் Install செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 28.07.2023 அன்று கோவை பந்தய சாலையிலுள்ள திருமண்டல அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் படிக்க