• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குழந்தை தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு

July 28, 2023 தண்டோரா குழு

கோவையில் ஓட்டல்,நகைக்கடையில் பணிக்கு அமர்த்தப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் 7 பேர் மீட்கப்பட்டு 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் ஓட்டல்கள், மளிகை கடைகள், வணிக நிறுவனங்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனரா? என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

இந்நிலையில்,கோவை குனியமுத்தூரில் உள்ள ஒரு ஓட்டல் மற்றும் கடைவீதி செட்டி தெருவில் உள்ள நகைக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலக குழந்தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் நேற்று குறிப்பிட்ட ஓட்டல் மற்றும் நகைக்கடையில் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது.இதனையடுத்து அதிகாரிகள் ஓட்டலில் பணி செய்த 3 சிறுவர்களையும், நகைக்கடையில் பணியாற்றிய 4 சிறுவர்களையும் மீட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் இதுகுறித்து கடை உரிமையாளர்கள் மீது போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், சிறுவர்களை பணிக்கு அமர்த்திய நகைக்கடை உரிமையாளர் லட்சுமி நாராயணன்,ஓட்டல் மேலாளர் முகமது ஹரீஸ் ஆகிய இருவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க