• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா-2023′ தலைப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்,சூரிய ஆற்றல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம்

July 25, 2023 தண்டோரா குழு

கோவையில் நிலையான இந்தியா-2023′ என்ற தலைப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சூரிய ஆற்றல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்க நிகழ்ச்சி துவங்கியது.

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Solar Energy Corporation of India (SECI) மற்றும் தன்னார்வ அமைப்பான நிலைத்தன்மை ஆற்றல் பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு (SEPA) மற்றும் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி ஆகியோர் இணைந்து,’நிலையான இந்தியா-2023′ என்ற தலைப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சூரிய ஆற்றல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் கோவை பீளமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணம்மாள் கல்லூரியில் துவங்கியது.

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில்,முன்னதாக ஜி.ஆர்.ஜி.டிரஸ்ட் நிறுவனர் அறங்காவலர் நந்தினி அனைவரையும் வரவேற்று பேசினார்.SEPA அமைப்பின் தலைவர் ரகுராம் அர்ஜுனன்,கேரள மாநில மின்சார வாரியத்தின் முன்னால் முதன்மை பொறியாளர் அனில் பிள்ளை, சென்னை ஐ.ஐ.டி யைச் சேர்ந்த அரவிந்த் குமார், ஓய்வு பெற்ற மின்சார வாரிய அலுவலர் சிவலிங்கராஜன்,மற்றும் துறை சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆனந்த்,ரமேஷ் ஆகியோர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான தொழில்நுட்பங்கள், சூரிய ஆற்றல் மற்றும் பசுமை ஆற்றல் ஆகிய தலைப்புகளில் தொழில் துறையினர் மற்றும் எரிசக்தி துறை வல்லுனர்கள் பங்கேற்கும் அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்தரங்கின் துவக்க விழாவில், கிருஷ்ணம்மாள் கல்லூரியின் செயலர் முனைவர் யசோதா தேவி, மற்றும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் ஏராளமான மாணவிகள், தொழில் முனைவோர் மற்றும் ,பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க