• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களை உருவாக்கும் திட்டத்தில் கையெழுத்து இயக்கம்

July 3, 2023 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் CSW பவுண்டேசன் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் ஆகியோர் இணைந்து “பருவத்தே பயிர் செய்வோம்” என்ற தலைப்பில் புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களை (Tobacco Free Zone) உருவாக்கும் திட்டம், கையெழுத்து இயக்கம், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகளை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.

இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் மாநகராட்சி கல்வி & பூங்கா குழுத்தலைவர் மாலதி நாகராஜ், நகர் நல அலுவலர் மரு.தாமோதரன், மாநகராட்சி கல்வி அலுவலர் மரிய செல்வம், பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ராஜேஸ்வரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க