• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய கராத்தே போட்டி: கோவை ஆலன் திலக் பயிற்சி மைய மாணவர்கள் அபாரம்

June 29, 2023 தண்டோரா குழு

இந்திய கராத்தே சங்கம், புதுடெல்லியில் கடந்த மே 31ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை, அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது. இதில் கோவை ஆலன் திலக் சர்வதேச கராத்தே பயிற்சி மையத்தை சேர்ந்த 13 மாணவர்கள், 4 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் இந்த பயிற்சி மையத்தை சேர்ந்த எஸ்.ஜெய் ஆகாஷ், 13 வயதுக்குட்பட்டோருக்கான 40 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கமும், கே.எஸ்.வைஷ்ணவ் 14-15 வயதுக்குட்பட்டோருக்கான 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கமும், கே.ஆர்.ஶ்ரீவர்ணா 12 வயதுக்குட்பட்டோருக்கான 40 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

போட்டியில் பதக்கம் வென்றவர்கள், பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரையும், ஆலன் திலக் சர்வதேச கராத்தே பயிற்சி மைய இயக்குநர் எஸ்.பால் விக்ரமன் பாராட்டி வாழ்த்தினார்.

மேலும் படிக்க