• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ராஜவீதியில் 1.5 டன் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

June 21, 2023 தண்டோரா குழு

கோவை ராஜவீதியில் லாரிமூலம் கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட 1.5 டன் பிளாஸ்டிக் கவர்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையில் மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.குறிப்பாக பல்வேறு கடைகள், சாலையோர கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சேலத்தில் இருந்து லாரி மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை ரகசிய தகவலின் அடிப்படையில் ராஜவீதியில் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதில் ஒன்றரை டன் பிளாஸ்டிக் கவர்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, இந்த பிளாஸ்டிக் கவர்கள் யாருக்கு அனுப்பப்படுகிறது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க