• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குனியமுத்தூரில் தனியார் ஒர்க் ஷாப்பில் 6 கார்களில் தீ பற்றியதால் பரபரப்பு

June 15, 2023 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூரை அடுத்த இடையர்பாளையம் சாலையில், தனியார் ஒர்க் ஷாப் செயல்பட்டு வருகிறது.இதனை டிசோசோ என்பவர் நடத்தி வருகிறார். இங்கு பல்வேறு கார்கள் பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அரவிந்த் என்பவரது சொகுசு கார் பழுது நீக்கப்பட்டுள்ளது.

பழுது நீக்கப்பட்ட அந்த காரை அரவிந்த் ஓட்டி பார்த்துவிட்டு மீண்டும் ஒர்க் ஷாப்பில் நிறுத்தி உள்ளார். அப்போது சில நொடிகளில் எதிர்பாராத விதமாக காரில் திடீரென தீப்பற்றி உள்ளது. இதனை அடுத்து அங்கு பணிபுரிபவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள்ளாகவே அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கார்களில் தீ பற்றியுள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படாமல் உயிர்தப்பினர்.

இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கார் தீ பற்றியதன் காரணமாக அதிகளவிலான கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

மேலும் படிக்க