• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குனியமுத்தூரில் தனியார் ஒர்க் ஷாப்பில் 6 கார்களில் தீ பற்றியதால் பரபரப்பு

June 15, 2023 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூரை அடுத்த இடையர்பாளையம் சாலையில், தனியார் ஒர்க் ஷாப் செயல்பட்டு வருகிறது.இதனை டிசோசோ என்பவர் நடத்தி வருகிறார். இங்கு பல்வேறு கார்கள் பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அரவிந்த் என்பவரது சொகுசு கார் பழுது நீக்கப்பட்டுள்ளது.

பழுது நீக்கப்பட்ட அந்த காரை அரவிந்த் ஓட்டி பார்த்துவிட்டு மீண்டும் ஒர்க் ஷாப்பில் நிறுத்தி உள்ளார். அப்போது சில நொடிகளில் எதிர்பாராத விதமாக காரில் திடீரென தீப்பற்றி உள்ளது. இதனை அடுத்து அங்கு பணிபுரிபவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள்ளாகவே அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கார்களில் தீ பற்றியுள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படாமல் உயிர்தப்பினர்.

இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கார் தீ பற்றியதன் காரணமாக அதிகளவிலான கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

மேலும் படிக்க