• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர்

June 14, 2023 தண்டோரா குழு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு, குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறது. அதன் ஒரு நிகழ்வாக கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு ஆய்வு மேற்கொண்ட பொது கணக்கு குழுவின் தலைவர் செல்வப் பெருந்தகை குழந்தைகள் வார்டு, MRI ஸ்கேன் ஆய்வகம், உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்கு பழுதடைந்துள்ள சாலைகளை சரி செய்யுமாறு மருத்துவமனை முதல்வரிடம் தெரிவித்தார். மேலும் அங்குள்ள நோயாளிகளிடமும் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, 2018ம் ஆண்டு தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸஸ் கார்ப்பரேசனால் வழங்கப்பட்ட MRI கருவியை 90 நாட்களுக்குள் பொருத்தவில்லை என்று பரிந்துரைத்ததையடுத்து அது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை சரியான நேரத்தில் தான் பதிவு செய்திருக்கிறோம் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து நாளை நடைபெறும் குழுவில் முடிவு செய்ய உள்ளோம். கோவை அரசு மருத்துவமனை பல்வேறு வேலைகள் பராமரிக்கப்பட வேண்டியுள்ளது, அதற்காக இவர்கள் கேட்கும் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி தர வேண்டும். இந்த கோவை அரசு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி இன்னும் தரம் உயர்த்தி அடிப்படை ஆதாரங்களை செய்து தர வேண்டும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என பொது கணக்கு குழு மூலமாக பரிந்துரைத்துள்ளோம் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது குழுவின் உறுப்பினர்கள், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, சட்டப்பேரவை இணை செயலாளர் தேன்மொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க