• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து விவகாரம் -இரண்டு வாலிபர்கள் விடுவிப்பு

June 10, 2023 தண்டோரா குழு

வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக கோவை கரும்புக்கடை பாரத் நகரை சேர்ந்த சுலைமான் (வயது 27), மற்றும் சபா கார்டனை சேர்ந்த அப்துல் காதர் (27) ஆகியோர் வீடுகளில் கடந்த 7-ம் தேதி சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் கரும்புக்கடை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் இருந்து செல்போன்கள், லேப்டாப், மற்றும் சில புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் இருவரிடமும் டெல்லி, தூத்துக்குடி,ஆந்திரா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் தொழில் சம்பந்தமாக சென்று வந்த ஆவணங்களை காண்பித்தனர். இதையடுத்து 2 நாட்கள் விசாரணைக்கு பின் அவர்களை போலீசார் விடுவித்தனர்.

மேலும் படிக்க