• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

5 கிலோ கஞ்சா பறிமுதல் : ஒடிசா இளைஞர் கைது

June 9, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே செட்டிபாளையம் சாலை மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் அங்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது போலீசாரை கண்டதும் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஸ்ப்ளென்ட் ரோஷன் ரைக்கா(29) என்பவர் தப்பித்து ஓட முயன்றார். போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க