• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

5 கிலோ கஞ்சா பறிமுதல் : ஒடிசா இளைஞர் கைது

June 9, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே செட்டிபாளையம் சாலை மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் அங்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது போலீசாரை கண்டதும் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஸ்ப்ளென்ட் ரோஷன் ரைக்கா(29) என்பவர் தப்பித்து ஓட முயன்றார். போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க