• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவிலேயே சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ள இரத்தினம் தொழில்நுட்ப வளாகம்

June 6, 2023 தண்டோரா குழு

2018 ஆம் ஆண்டில் இந்திய அரசின் உயர்கல்வித்துறை ஆரியா(Atal Ranking of Institutions on Innovation Achievements) என்ற ஒரு தரமிடும் முறையை உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு கொண்டுவந்தது. இந்த தரமிடும் முறையானது ஏழு முக்கிய அம்சங்களுடன் மதிப்பிடப்படுகிறது.

இந்த ஏழு அம்சங்கள் ஒரு உயர் கல்வி நிறுவனத்தின் புதிய யோசனைகளையும், அதன் செயலாக்கத்தையும் அளக்கும் மிக முக்கியமான 22 செயல்திறன் அளவீடுகளையும் கொண்டு செயல்படுகிறது . இதன் நான்காவது பதிப்பில் 1417 உயர்நிலை கல்வி நிறுவனங்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தது. அதில் 1077 தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களும், 340 பிற உயர்கல்வி நிறுவனங்களும் பங்குபெற்றது. இந்த அரியாவின் நான்காவது பதிப்பானது NIRF -புதுமையைக் கண்டறிதல் என்ற பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த பெயருக்கு தகுந்தாற்போல் அதன் கட்டமைப்பு, அளவுருக்கள் மற்றும் முக்கிய செயல்திறன் காட்டி என ஆரியா அதன் தரத்தை மாற்றிக்கொண்டது. இரத்தினம் தொழில்நுட்ப வளாகம் 2023 ஆம் ஆண்டின் NIRF – புதுமையை கண்டறிதல் என்ற பிரிவின் கீழ் இந்தியாவிலேயே சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.

(கல்லூரி 51 முதல் 100 வரையிலான வரிசையில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது)கடந்த வருடம் இரத்தினம் தொழில்நுட்ப வளாகம் எக்ஸலண்ட் பேண்ட் என்ற சிறப்பான இடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க