• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிகம் பாரம் ஏற்றி சென்ற 72 லாரிகளுக்கு அபராதம்

June 3, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு லாரிகளில் கனிம வளங்கள் அதிகமாக கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் கரூர்,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கோவை வழியாக லாரிகளில் சரக்குகள், கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் மேற்கண்ட லாரிகளில் நிர்ணயம் செய்யப்பட்ட எடையை விட அதிக பாரம் ஏற்றி செல்லப்படுவதாக கோவை வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.இதனை தொடர்ந்து கடந்த 5-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கருமத்தம்பட்டி, வாளையாறு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மொத்தம் 802 லாரிகளில் சோதனை நடத்தியதில் 72 லாரிகளில் நிர்ணயம் செய்யப்பட்டதை விட அதிக பாரம் ஏற்றி செல்லப்பட்டது தெரியவந்தது.இந்த லாரிகளுக்கு மொத்தம் ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க