• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீரியம்பாளையத்தில் ரூ.88 லட்சத்தில் சாலை பணிகளை மேயர் ஆய்வு

May 29, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வீரியம்பாளையம் முதல் அன்னைபிள்ளையார் கோவில் வரை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் நேருநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிவகுப்பறைகள் புனரமைக்கும் பணிகள் மற்றும் கருப்பராயம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறைகள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மேயர் கல்பனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட பொறியாளாருக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது உதவி கமிஷனர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க