• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் சிறுதானியங்கள் பயரிட ஊக்கவிக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

May 24, 2023 தண்டோரா குழு

தமிழகத்தில் சிறுதானியங்கள் பயரிட ஊக்கவிக்கப்பட்டு வருவதாகவும்,10 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியம் பயிர் செய்யப்பட்டுள்ளதாக ,தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சியை தமிழக,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். சிறுதானிய கண்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை அமைச்சர் பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

கண்காட்சியில் புதிய ரக சிறு தானியங்கள், விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது எனவும், சிறு தானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்தார்.தமிழகத்தில் சிறுதானியங்கள் பயரிட ஊக்கவிக்கப்பட்டு வருகிறது எனவும்,10 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியம் பயிர் செய்யப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

38.2 மெட்ரிக் டன் சிறுதானிய உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த அவர்,வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதிய ரகங்கள், அதிக லாபம் தரக்கூடிய பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது எனவும்,
வெளிநாடுகளில் புதிய பயிற்சியை மேற்கொள்ள ஆராய்ச்சி மாணவர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார். துபாய், கனடா போன்ற நாடுகளில் மாணவர்கள் அங்குள்ள புதிய முறைகள் அறிந்து பயிலக்கூடிய பயிற்சி மேற்கொள்ள வசதியாக இந்த திட்டம் பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், இந்தாண்டு 50 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.

சிறு தானிய வளர்ச்சிக்காக தரமான விதைகள் உள்ளிட்ட செயல்பாட்டிற்காக 82 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.தென்னை கள் இறக்க விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினரிடையும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுக்கும் எனவும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் வேளாண்மை துறை சார்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

மேலும் படிக்க