• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாடகை வீடுகளின் வாடகையை அரசாங்கம் நிர்ணயம் செய்ய வேண்டும்- மாவட்ட ஆட்சியரிடம் மனு

May 22, 2023 தண்டோரா குழு

தமிழக மக்கள் விடுதலை கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில்,,

கோவை மாவட்டத்தில் வாடகை வீடுகளின் எண்ணிக்கையை அரசாங்கம் தொகுக்க வேண்டும் எனவும் வாடகை வீடுகளில் வாடகை தொகையை சதுர அடி அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் சாதி மதம் கேட்டு வாடகை வீடு தரமறுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக பட்டா வழங்கபடாமல் இருக்கும் பொது மக்களின் வீட்டு வாடகை செலவை அரசாங்கமே ஏற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனு கோவை மாவட்ட வாடகைக்கு குடியிருப்பு சங்கத்தின் பொது செயலாளர் வெள்ளிமலை தலைமையில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க