• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்பிற்கு 3 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பு

May 12, 2023 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைன் மூலம் கடந்த 8-ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இந்நிலையில் கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்பில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், தாவரவியல், பி.காம் உள்ளிட்ட 23 படிப்புகள் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், 1,433 இடங்கள் நிரப்பப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம் பதவி செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவு கட்டணம் ரூ.2 ஆகும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை. பதிவு கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 19-ம் தேதி கடைசி நாளாகும்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் 3 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். அறிவியல் பாடங்களை விட, கலை பாடப்பிரிவுகளில் விண்ணப்பிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் படிக்க