• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் ரூ.1.4 கோடி அபராதம் வசூல்

May 4, 2023 தண்டோரா குழு

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட சோதனைகளில் டிக்கெட் இல்லாமல் பயணம், முறையற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் போன்றவற்றின் மூலம் ரூ.1 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 112 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் கூறியிருப்பதாவது:

பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய, சேலம் கோட்டத்தின் டிக்கெட் சோதனைக் குழு உறுப்பினர்கள் ரயில் மற்றும் ரயில்வே வளாகங்களில் வழக்கமான சோதனைகளை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற சோதனைகளின் போது, டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் நபர்கள், முறையற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்கள் போன்றவற்றை கண்டறிந்து அதற்கேற்ப அபராதம் விதிக்கின்றனர்.

அதன் படி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சோதனையில் 10 ஆயிரத்து 47 பேர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததைக் கண்டறிந்து, அவர்கள் இடமிருந்து ரூ.79 லட்சத்து 45 ஆயிரத்து 455 அபராதமாக வசூல் செய்யப்பட்டது. அதே போல் 5069 பேர் முறைகேடான பயணங்கள் மேற்கொண்டது கண்டறியப்பட்டு, அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.24 லட்சத்து 85 ஆயிரத்து 769 வசூலிக்கப்பட்டது.

மேலும் முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான லக்கேஜ்களை எடுத்துச் செல்லுதல் ஆகிவற்றில் 60 முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதற்கு அபராதமாக ரூ.25 ஆயிரத்து 888 வசூல் செய்யப்பட்டுள்ளது. சேலம் கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புப் குழுவினர் அபராதமாக வசூலித்த மொத்தத் தொகை ரூ.1 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 112 ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க