• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகை த்ரிஷாவுக்கு எதிராக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம்

January 13, 2017 தண்டோரா குழு

“பீட்டா”வுக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டதாக நடிகை த்ரிஷாவுக்கு எதிராக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அவரது படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

காரைக்குடி அருகே நேமத்தான்பட்டியில், கவாஸ்கர் இயக்கத்தில், ஆர்யா, த்ரிஷா நடிக்கும் “கர்ஜனை” படப்பிடிப்பு நடைபெற்றது. இதனை அறிந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அங்கு வந்தனர். நடிகை த்ரிஷா பீட்டா அமைப்புக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தார் என்று கூறி, எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

பீட்டாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட த்ரிஷா மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என போராட்டம் நடத்தியவர்கள் கூறியுள்ளார்கள்.

இதையெடுத்து, தகவல் அறிந்த காரைக்குடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் திரைப்படக் குழு படப்பிடிப்பு நடத்த உரிய அனுமதி பெறவில்லை என்று தெரியவந்தது. இதனை அடுத்து படப்பிடிப்புக்கு உதவிய வாகனத்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க