• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டி.டி.வி. தினகரனுக்கு 28 லட்சம் அபராதம்- கோர்ட் உறுதி

January 6, 2017 தண்டோரா குழு

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் உறவினர் டி.டி.வி. தினகரனுக்கு அந்நியச் செலவாணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட 28 லட்சம் ரூபாய் அபராதத்தை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) உறுதி செய்தது.

1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. அந்த நேரத்தில், ‘தான் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை பெற்றவன்’ என்று தினகரன் வாதிட்டார். அந்த வாதத்தை ஏற்க மறுத்த அமலாக்கத் துறை அவருக்கு ரூ. 28 லட்சம் அபராதம் விதித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் டிடிவி தினகரன். இந்த மனு நீதிபதி மகாதேவன் தலைமையிலான பெஞ்ச் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். டி.டி.வி. தினகரனுக்கு விதிக்கப்பட்ட 28 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது சரியே என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும் படிக்க