• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சபரிமலையில் கூட்ட நெரிசல் 30 பேர் காயம்

December 26, 2016 எலிசபெத் டி சோஸா

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நேரிசில் சிக்கி 30 பேர் காயமடைந்தனர்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் உலக புகழ் பெற்றதாகும். அக்கோவிலில் அதிகமானோர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 25) கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து பதனம்திட்டா மாவட்ட ஆட்சியர் கிரிஜா கூறியதாவது: கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோர் கோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த மூன்று பேர் கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

41 நாள் மண்டல பூஜை திங்கள்கிழமை (டிசம்பர் 26) நிறைவடைவதால் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் கட்டியிருந்த கயிறு அறுந்து விழுந்ததால் அங்கு நின்றிருந்த மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இதனால் 30 பேர் காயமடைந்தனர்.

மண்டல பூஜையின் போது சுவாமி ஐயப்பனுக்கு மீது அலங்கரிக்கப்பட வேண்டிய நகைகளைக் கொண்டுவந்த ‘தங்கச் தேர்’ பவனியின் போது இந்த சம்பவம் நேர்ந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பம்பா முதல் சந்நிதானம் வரை கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், தேவஸ்வம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் சுவாமி ஐயப்ப சுவைமியைத் தரிசித்து விட்டு, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் பக்தர்களை சந்தித்தார்.

http://www.ndtv.com/kerala-news/at-least-20-sabarimala-pilgrims-injured-in-stampede-1641699

மேலும் படிக்க