November 22, 2018
findmytemple.com
சுவாமி : காமாட்சி (ஆதி காமாட்சி, தவக்காமாட்சி).
தலவிருட்சம் : மாமரம்.
தலச்சிறப்பு :அம்மன் ஒற்றை காலில் தவம் செய்த இடம்.இத்தலத்தில் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் காமாட்ஷி அம்மன் திருக்கல்யாண வைபவத்திற்காக சீர்வரிசை கணையாழியுடன் வந்த ஸ்ரீ வைகுண்டப்பெருமாள் வலது கரத்தில் பிரயோக சக்கரத்துடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.பக்தர்கள் தங்கள் எண்ணம் ஈடேறினால் அம்பாளுக்கு புடவை சாற்றி வழிபடுவதும் இத்திருக்கோவிலில் சிறப்பாகும்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 1.30 மணி வரை,மாலை 3.00 முதல் இரவு 9.30 மணி வரை.
குறிப்பு:- ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
கோயில் முகவரி : அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்,மாங்காடு – 600 122, காஞ்சிபுரம் மாவட்டம்.