• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிகமான பொறுப்பு தான் போட்டியை உணர வைக்கும் : கோலி!

January 9, 2017 tamil.samayam.com

‘இந்திய அணிக்காக அதிகமாக பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் போது தான் போட்டியை சரியாக புரிந்து கொள்ள முடியும்,’ என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் முறையாக கோலி தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

மூன்று விதமான கிரிக்கெட்டுக்கு கேப்டனாக பொறுப்பால் நெருக்கடி எதுவும் இல்லை என தெரிவித்துள்ள இந்திய கேப்டன் கோலி, அப்போது தான், போட்டியை நன்றாக புரிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோலி கூறுகையில்,’ தோனி இதற்காகவே என்னை தயார் செய்தார். எப்போதும் ஆட்டத்தின் போக்கை எப்படி கணிப்பது என்றே சொல்லிக்கொண்டே இருப்பார். போட்டியின் போக்கோடு என்னை தயார் செய்வதிலும் தோனி கவனம் செலுத்தினார். அந்த பொறுப்பு தான் என்னை சிறந்த வீரராக செதுக்கியது. தவிர, போட்டியையும் நன்கு புரிந்து கொள்ள உதவியது,’ என்றார்.

மேலும் படிக்க