May 28, 2026
தண்டோரா குழு
கோவையின் பெருமை என்று அழைக்கப்படும் உணவக நிறுவனமான ஸ்ரீ அன்னபூர்ணா, தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் வியாழக்கிழமை (28.05.26) அன்று திறந்தது. மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.எஸ். சதீஷ்குமார் அவர்கள் புதிய கிளையைத் திறந்துவைத்தார்.
முதல் தளத்தை கோவை மாவட்ட ஹோட்டலியர்கள் சங்க நிர்வாகிகள் அன்னலட்சுமி உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ராமசாமி மற்றும் ஹரிபவனம் உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். பாலச்சந்தர் இணைந்து தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டி. சீனிவாசன்,இணை நிர்வாக இயக்குநர் ஆர். வெங்கடேஷ், தலைமைச் செயல் அதிகாரி ஜெகன் எஸ். தாமோதரசுவாமி, மற்றும் எக்சிகியூடிவ் இயக்குநர் விவேக் சீனிவாசன், கார்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
12,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கிளையில், பிரத்யேக டைனிங் ஹால், இனிப்பு மற்றும் பேக்கரிப் பிரிவு மற்றும் விசாலமான வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
தரை தளத்தில் அமைந்துள்ள டைனிங் ஹாலில் ஒரே நேரத்தில் 220 பேர் அமர்ந்து உணவருந்த முடியும்.
இந்த கிளையின் முதல் விற்பனையை திரு. எஸ்.கே.எம் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீ சிவகுமார் தொடங்கிவைக்க, அதைனை அவென்யூ குழுமத்தின் தலைவர் எம்.எஸ்.குமரன் பெற்றுக்கொண்டார்.
பிரத்யேகமாக இனிப்பு மற்றும் பேக்கரிப் பிரிவில் 100-க்கும் மேற்பட்ட இனிப்பு வகைகள், 25-க்கும் அதிகமான கார வகைப் பலகாரங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பேக்கரி உணவு வகைகளை வாங்கி மகிழலாம். இந்த வளாகத்தில் 100 கார்களை நிறுத்தும் வசதியுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.