• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘டாஸ்’ போடும் போதே நிர்ணயிக்கப்பட்டதா மும்பையின் வெற்றி : பைனலில் அதிர்ச்சி!

May 22, 2017 tamilsamayam.com

பத்தாவது ஐபிஎல்., பைனலில் மும்பை அணி, புனே அணியை 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஆனால் இது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது என தெரிகிறது.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவிற்கு வருகிறது. இதில் ’பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெற்ற ஐதராபாத், கொல்கத்தா அணிகளை விரட்டியடித்த மும்பை, புனே அணிகள் பைனலுக்கு முன்னேறின.

இதில் மும்பை அணி, 1 ரன் வித்தியாசத்தில் புனே அணியை வீழ்த்தி, ஐபிஎல் அரங்கில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. ஆனால் இந்த வெற்றி, இப்போட்டி துவங்கும் முன்னே நிர்ணயிக்கப்பட்டதாக தெரிகிறது.

இப்போட்டிக்காக பிரத்யேகமாக ‘டாஸ்’ காயின் தயாரிக்கப்பட்டிருந்தது. அந்த காயின் முழுவதுமாக, மும்பை அணியின் ப்ளூ கலரில் இருந்தது. பத்தாவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்காகவும் இதே போல டாஸ் காயின் தயாரிக்கப்பட்டிருந்தது. அதில் ஐதராபாத் அணியின் ஆரஞ்சு நிறத்தில் இருந்தது.

அப்போட்டியில் ஐதராபாத் அணி, வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி வென்றது. முதல் போட்டியில் ஐதராபாத் அணி, முதலில் பேட்டிங் செய்தது. அதேபோல இப்போட்டியிலும் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

மேலும் படிக்க