• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அணியிலிருந்து விலக்கப்பட்ட போது நம்பிக்கை இழந்துவிட்டேன்

January 20, 2017 tamilsamayam.com

இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்ட போது மீண்டு வருவது பற்றிய நம்பிக்கையை இழந்துவிட்டதாக யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பிடித்தார் யுவராஜ் சிங். நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடிய அவர் தசம் விளாசினார். வழக்கமான தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய யுவராஜ் 127 பந்துகளில் 150 ரனகள் குவித்தார்.

தனது இந்த சதம் பற்றி பேசிய அவர், தான் விளையாடிய சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்று என்று கூறியுள்ளார். மேலும், புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்த பிறகு அணியில் இருந்து விலக்கப்பட்ட போது மனமுடைந்து நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்தித்தாள், தொலைகாட்சி எதையும் பார்க்காமல் முழுவதும் பயிற்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். ரஞ்சிக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம்பிடிக்க விரும்பினேன். எனக்கான நேரம் வரும் வரை காத்திருப்பதற்கு முடிவுசெய்தேன்.

தோனியுடன் இணைந்து விளையாடுவது பற்றி கூறிய அவர், “நானும் தோனியும் இணைந்து இந்திய அணிக்கு பல போட்டிகளில் வெற்றி தேடித்தந்திருக்கிறோம். அனுபவம் மிக்க வீரரான அவர் விளையாடுவதைப் பார்ப்பது சிறப்பான அனுபவம்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க