• Download mobile app
29 May 2026, FridayEdition - 3761
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிளியைப்பற்றி குரங்குக்கு என்ன தெரியும்: மலிங்கா!

June 27, 2017 tamil.samayam.com

தங்களை கொழுப்பு பிடித்தவர்கள் என கேலி செய்த அமைச்சரை, குரங்கு என சொல்லி பதிலடி கொடுத்து சிக்கலில் சிக்கியுள்ளார் மலிங்கா.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடந்தது. இதில் இந்திய அணியை வீழ்த்தி பெருமைபாடிய இலங்கை அணி, பாகிஸ்தான் அணியிடம் படு தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

இதனால் கடுப்பான இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜெயசேகரா, அந்நாட்டு வீரர்களை கடுமையாக வசைபாடினார். குறிப்பாக அவர் கூறுகையில்,’ பொதுவாக கிரிக்கெட் வீரர்களுக்கு உடலில் 16 சதவீதம் தான் கொழுப்பு இருக்க வேண்டும். ஆனால் இலங்கை அணியில் பெரும்பாலான வீரர்களுக்கு 25 சதவீதம் உள்ளது. அதனால் எதிர்காலத்தில் 16 சதவீதத்துக்கு மேல் கொழுப்பு உள்ளவர்கள், இனி அணியில் கட்டாயம் சேர்க்கப்படமாட்டார்கள். ஐபிஎல்., போட்டிகளில் நான்கு ஓவர்கள் மட்டும் வீசவே பவுலர்கள் தகுதியுள்ளவர்களாக மாறிவருகின்றனர். இவர்களுக்கு தேசத்தைவிட ஐபிஎல்., மூலம் கிடைக்கும் பணமே முக்கியமாக உள்ளது.’ என்றார்.

இதற்கு தற்போது பதில் அளித்துள்ள இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா கூறுகையில்,’சும்மா சேரில் உட்கார்ந்து சீட்டை தேய்ப்பவர்கள் சொல்வதைப்பற்றி எனக்கு கவலையில்லை. கிளி வாழும் பொந்தில் என்ன உள்ளது என குரங்கிற்கு எப்படி தெரியும்?’ என்றார். இந்த கருத்தால், மலிங்கா அணியில் இருந்து நீக்கப்படலாம் என அந்நாட்டு முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க