• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கால்பந்து போட்டியில் சேலம் கோட்ட ரயில்வே அணி வெற்றி

May 3, 2017 தண்டோரா குழு

தெற்கு ரயில்வேயின் கோட்டங்களிடையிலான கால்பந்து போட்டியில் சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை அணி வெற்றி.

கேரளா மாநிலம் கொல்லத்தில் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்ற தெற்கு ரயில்வேயின் கோட்டங்களிடையிலான கால்பந்து போட்டியில் சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை அணி வெற்றி பெற்று கோப்பையை பெற்றுள்ளது.

இந்த அணி வெற்றி பெற்றதை அடுத்து வென்ற கோப்பையை, ரயில்வே பாதுகாப்புப் படை அணியினர் சேலம் கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மாவை சந்தித்து நேற்று (மே-2)காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த சந்திப்பின் போது அவர்களுடன் சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையர் சிவதாஸ் மற்றும் சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் பெருமாள் நந்தலால் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க