June 10, 2017
ஒலிம்பிக் போட்டியில் புதிதாக 5 விளையாட்டுக்களை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதியளித்துள்ளது.
உலகிலேயே மிகமுக்கிய விளையாட்டுப் போட்டியாக கருத்துப்படுவது ஒலிம்பிக் போட்டி தான். இந்த ஒலிம்பிக் போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்தாண்டு பிரேசிலிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றது.
ரியோவில் நடைப்பெற்ற போட்டியில் 42 விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தது.இந்தநிலையில் அடுத்த ஒலிம்பிக் போட்டினது 2020-ம் ஆண்டு டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. டோக்கியோவில் நடைப்பெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் புதிதாக 5 விளையாட்டுக்களை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதியளித்துள்ளது.
ஆடவர் மற்றும் பெண்கள் இணைந்து பங்கேற்கும் கலப்பு தொடர் ஓட்டம், கலப்பு தொடர் நீச்சல், கலப்பு கூடைப்பந்து போட்டிகளுக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி அளித்துள்ளது.