• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு அடியில் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய யுவராஜ்!

June 12, 2017 tamilsamayam.com

கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க யுவராஜ் சிங் சிக்ஸர் அடித்து போட்டியை நிறைவேற்றி உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், நேற்று நடந்த முக்கிய ஆட்டத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்று அசத்தியது.

ரசிகர்களின் வேண்டுகோள்:

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட் பறிகொடுத்து 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அணிக்கு தவான் 78, கோலி 76 சேர்த்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.

சிகர் தவான் அவுட்டான பின் களமிறங்கிய யுவராஜ் சிங், சிறப்பாக விளையாடி வந்தார். அப்போது இந்தியா வெற்றி பெற 5 ரன்கள் மட்டுமே தேவை என்ற சூழலில், மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் ஒன்றாக சேர்ந்து “எங்களுக்கு தேவை சிக்ஸர்” (We want sixer) என கோஷமிட்டனர்.

அப்போது டுமினி வீசிய 37.6 பந்தை சிக்ஸருக்கு விரட்டி, ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார். தோனி எப்போதும் போட்டியை முடிக்கும் போது சிக்ஸர் அடித்து முடித்து வைப்பது வழக்கம். ஆனால் நேற்றைய போட்டியில் தோனி அந்த நேரத்தில் களமிறங்காததால், ரசிகர்களின் விருப்பத்தை யுவராஜ் சிங் நிறைவேற்றி ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்கச் செய்தார்.

மேலும் படிக்க