• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இப்படி செய்யலாமா – அதிர்ச்சியில் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள்

December 16, 2023 தண்டோரா குழு

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணியின் முக்கிய நபராக விளங்குபவர் ரோஹித் சர்மா.

இந்நிலையில்,அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணியின்
கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியபோதே, அவர் ரோகித் சர்மாவின் இடத்தை பிடிப்பார் என்ற பேச்சு அடிபட்டது. இதனை உறுதி செய்யும் வகையில்,நேற்று அறிவிப்பு வெளியானது.

இதனால் ரோகித் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பை அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா, கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதை அவர்களால் ஏற்க முடியவில்லை. இணையதளங்களில் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க