• Download mobile app
29 May 2026, FridayEdition - 3761
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய கிரிக்கெட் அணையின் புதிய சீருடை

January 13, 2017 tamil.oneindia.com

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடையை பி.சி.சி.ஐ அறிமுகபடுத்தியுள்ளது.

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள ஒரு நாள் போட்டியில் புதிய சீருடையுடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

முதல் போட்டி 15ம் தேதி தொடங்குகிறது. இந்த புதிய சீருடையை ஸ்பான்சர் நிறுவனமான நைக் நிறுவனம் தயாரித்துள்ளது. புதிதாக அறிமுகபடுத்தியுள்ள இந்த ஜெர்சியை, கடுமையான வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தயாரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புது ஜெர்சியுடன் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் உள்ள புகைப்படத்தை பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில் இந்திய வீரர்கள் தோனி, விராட் கோஹ்லி, அஷ்வின், ரஹானே மற்றும் மகளிர் அணி கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன் பீரீட், மிதாலி ராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.

இந்த சீருடை பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டது. கம்ஃபோர்ட்டானது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க