• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

யோகேஷ்வர் தத்தின் லண்டன் ஒலிம்பிக் வெண்கல மெடல் வெள்ளியாக மாறுகிறது

August 30, 2016 தண்டோரா குழு

மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் வாங்கிய வெண்கலப் பதக்கத்திற்கு பதில் வெள்ளிப் பதக்கம் அளிக்கப்படுகிறது.ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரர் யோகேஷவர் தத் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினார்.

ஆனால்,2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் அவர் 60 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.இந்நிலையில் 4 ஆண்டுகள் கழித்து அவருக்கு வெண்கலப் பதக்கத்திற்கு பதில் வெள்ளிப் பதக்கம் அளிக்கப்பட உள்ளது.

லண்டன் ஒலிம்பிக்கில் 60 கிலோ எடை பிரிவில் ரஷ்யாவைச் சேர்ந்த பெசிக் குடுகோவ்(27) வெள்ளிப் பதக்கம் வென்றார்.இந்நிலையில் பெசிக் கடந்த 2013ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் பலியானார்.ஆனால் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் போது சேகரித்த பெசிக் உள்பட 5 வீரர்களின் சிறுநீர் மாதிரிகளைச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு பரிசோதனை செய்தது.அதில் பெசிக் உள்பட 5 வீரர்கள் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க