• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறந்த குழந்தையின் உடலை பிரிட்ஜில் வைத்த தாய்

December 7, 2017

பெரு நாட்டில் உள்ள மருத்துவமனை இறப்புச் சான்றிதழ் கொடுக்க தாமதமாக்கியதால் குழந்தையின் உடலை வீட்டு பிரிட்ஜில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நாட்டைச் சேர்ந்தவர் மோனிகா பாலோமினோ.இவர் கடந்த டிசம்பர் 2ம் தேதி பிரசவத்திற்காக செர்ஜியோ பெர்னாலேஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சரியான வளர்ச்சியடையாமல் பிறந்த அந்த குழந்தை இறந்தது.அதன்பிறகு, மோனிகாவை மருத்துவமனையிலிருந்து இறந்த குழந்தையுடன் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். அதோடு, இறந்த குழந்தைக்கு தர வேண்டிய இறப்பு சான்றிதழையும் தரவில்லை.

இந்நிலையில் வீடு திரும்பிய மோனிகா, இறந்த குழந்தையை முறைப்படி புதைக்க வேண்டுமென்றால், இறப்பு சான்றிதழ் கண்டிப்பாக தேவை. அதனால், சான்றிதழ் கிடைக்கும் வரை, இறந்த குழந்தையை வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டு, அதன் கதவில் ‘யாரும் அதை தொடக்கூடாது’ என்று எழுதி ஒட்டிவிட்டார்.

இது குறித்து மோனிகா மருத்துவமனை இயக்குநரிடம் புகார் தெரிவித்தார்.இதனையடுத்து பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க