• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் கணவன், மனைவி அடித்து படுகொலை

December 29, 2017 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம்,காங்கேயம் சாலை, நாச்சிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துக்குமாரசாமி (67) விவசாயி அவரது மனைவி தெய்வாத்தாள் (62). இருவருக்கும் குழந்தைகள் இல்லாத நிலையில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு இவர்கள் வீட்டில் நீண்டநேரமாக கதவு திறந்து கிடந்த நிலையில், மின்விளக்கும் எரிவதை கண்டு, அப்பகுதியில் நள்ளிரவு ரோந்து வந்த போலீசார் சந்தேகம் அடைந்து சென்று பார்த்த பொழுது இருவரும் நள்ளிரவு அடித்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவினாசிபாளையம் காவல்துறையினர் உடல்களை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடிப்பதற்காக கொலை நடந்திருக்கலாம் என அவினாசிபாளையம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க