• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கருணை காட்ட வேண்டும்– போப் பிரான்சிஸ்

November 22, 2017 தண்டோரா குழு

போக்குவரத்து நிறுத்தங்களில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கருணை காட்ட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து நிறுத்தங்களில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கருணை காட்ட வேண்டும் என்றும் அதே நேரத்தில் சாலையை ஃபார்முலா ஒன்(Formula 1)தடங்கள் (Formula 1 race track)போல பயன்படுத்துபவர் மீது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இத்தாலிய நாட்டின் போக்குவரத்து பிரதிநிதிகள் மற்றும் ரயிவே காவல்துறையினரை போப் பிரான்சிஸ் சந்தித்து பேசினார்.அப்போது“சாலையில் வாகனத்தில் பயணம் செய்யும் பெரும்பாலானோர் கைபேசியை தவறாக பயன்படுத்துதல் அல்லது சாலை பாதுகாப்பு சட்டங்களை கீழ்படியாமல் இருப்பதால், அதனால் வரும் விளைவுகளை உணராமல் இருக்கின்றனர்.

மேலும், சாலையில் பொறுமையோடு செல்ல மனமில்லாமல், மற்ற வாகனங்களை முந்திக்கொண்டு வேகமாக பயணம் செய்வதால், சாலைகள் ஃபார்முலா ஒன்(Formula 1)தடங்களாக மாற்றப்படுகிறது.

எனினும், காவல்துறையினர் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது “கருணை” காட்ட வேண்டும் என்றும், நான் இப்படி சொல்வதால் அவர்கள் செய்த குற்றங்களுக்கு துணை நிற்பதாக கருதக்கூடாது. அந்த நபர் செய்த தவறை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அந்த நபரின் நடவடிக்கைக்கு பின்னணியில் உள்ள காரணத்தையும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்”என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் கூறினார்.

மேலும் படிக்க