• Download mobile app
21 Apr 2026, TuesdayEdition - 3723
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் நவம்பர் 11ம் தேதி வரை சுங்கக் கட்டணம் ரத்து

November 9, 2016 தண்டோரா குழு

நாடு முழுவதும் தேசிய நெடுஞ் சாலைகளில் நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டை வெளிக்கொண்டு வரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் தங்களிடம் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.

இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலைகளில் சில்லறைப் பிரச்னை ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. பல இடங்களில் தகராறும் ஏற்பட்டது. இதனை கருத்தில் சுங்க சாவடிகளில் ரூ.500 ரூ.1000 நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வரும் நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு வரை நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப் பட்டுள்ளதாகவும் சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க