• Download mobile app
23 Jun 2025, MondayEdition - 3421
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொலைக்காட்சி அலை வரிசைகள் ஆண்டு தோறும் உரிமம் புதுப்பிக்கத் தேவையில்லை

November 11, 2016 தண்டோரா குழு

தொலைக்காட்சி சேனல்கள் ஆண்டுதோறும் தங்களின் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்துள்ளோம் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்தார்.

தில்லியில் பொருளாதார நிபுணர்கள் கூட்டத்தில் வெங்கைய நாயுடு வெள்ளிக்கிழமை பேசியதாவது:

ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதால் கறுப்புப் பணத்தைத் தவிர நாட்டில் வேறு எதுவும் முடங்கவில்லை.

கறுப்புப் பணத்தை ஒழிக்க பிரதமர் எடுத்த துணிச்சலான நடவடிக்கை வரலாற்றில் குறிப்பிடும் படியானது. இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு இல்லை. ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்களை வாபஸ் பெற்றது திடீரென வந்த அறிவிப்பாகவும், நடவடிக்கையாகவும் இருக்கலாம். ஆனால், அதன் பின்னால், நீண்ட நாளைய செயல் திட்டம் உள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கையைச் சுயநலம் மிக்க சிலரைத் தவிர மற்ற அனைவரும் பாராட்டியுள்ளனர். நாட்டின் பொருளாதார நலன் கருதியே அரசு இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. கறுப்புப் பணத்தை தவிர, பஸ்கள், மெட்ரோ ரயில்கள் என அனைத்தும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. மற்றபடி எதுவும் முடங்கவில்லை.

தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் படும் சிரமங்களை டிவி சேனல்கள் ஒளிபரப்புவதில் தவறில்லை. அதே சமயம் அந்த சிரமங்களை மட்டும் காட்டுவது நல்லதல்ல.

இந்திய தொலைக்காட்சி சேனல்கள் ஆண்டுதோறும் தங்களின் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்துள்ளோம். மாநில தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடக்கும் என்றார். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க