• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என நம்புகிறேன்- குருமூர்த்தி

May 9, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என நம்புகிறேன் என குருமூர்த்தி கூறியுள்ளார்.சென்னையில் FICCI தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் துக்ளக் பத்திரிகை ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு சிறந்த முடிவு.சிறு,குறு தொழில் பற்றி பிரதமர் மோடியிடம் கூறினேன் அதை கேட்டதும் பிரதமர் அதிர்ச்சியடைந்தார்.கர்நாடக தேர்தலை கருதி காவிரி திட்டவரைவை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியது நல்லது.

காவிரி பிரச்னையில் வேறு சிந்தனையுடைய கர்நாடகா,கேரளா பேசி முடிவுக்கு வர வேண்டும். தமிழக முதல்வரை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கினால்,கர்நாடக முதல்வரும் சந்திக்க நேரம் கேட்பார்;முதல்வர்களை சந்திப்பது தான் பிரதமர் வேலையா?அதிமுக அரசுக்கு செயல்பாடு ஒன்று இருப்பது போல் தெரியவில்லை இருந்தால் பார்க்கலாம். நீட் குறித்து முழுபுரிதல் யாருக்கும் இல்லை என்பதால் போராட்டம் நடைபெற்று வருகிறது.கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என நம்புகிறேன்.அதைபோல் ரஜினிக்கு நான் ஆலோசகராக உள்ளேன் என்பதில் உண்மை இருந்தால் எனக்கு பெருமைதான்.தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது; அந்த வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என நம்புகிறேன்”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க