• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு

September 29, 2016 தண்டோரா குழு

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாததைக் கண்டித்து தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து,அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து முடித்துவிட்டது. திமுக நேற்றும் இன்றும் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது.

அதைபோல், இதர கட்சிகளும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது மற்றும் காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பதை கண்டித்தும் தமிழகத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க