• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளுக்கு விடுமுறை- தமிழக அரசு

November 4, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் காலியாக உள்ள தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் களத்தில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க, பா.ம.க என பல முனை போட்டிகள் நிலவி வருகிறது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுதாக்கல் முடிவடைந்து வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், ஓட்டுப்பதிவு நடைபெறும் நவம்பர் 19-ம் தேதி மூன்று தொகுதிகளிலும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வியாழக்கிழமை (நவ 3) வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும் 19-ம் தேதி பொது விடுமுறை விடப்படுகிறது.

இந்த தொகுதிகளை உள்ளடக்கிய கரூர், தஞ்சாவூர், மதுரை மாவட்டங்கள் மற்றும் இந்த தொகுதிகளில் வாக்குரிமை உள்ள அண்டை மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 19-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடவேண்டும்.

மூன்று தொகுதிகளிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் விடுமுறை அளிப்பதில்லை என்கிற குற்றசாட்டு நிலவி வருகிறது. தேர்தல் நாளான்று விடுமுறை அளிக்கப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க