• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

December 15, 2016 தண்டோரா குழு

நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றக் கோரி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது; நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கும், பார்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் அங்குள்ள மதுக்கடைகளின் உரிமத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குப் பிறகு நீட்டிக்கக் கூடாது.

மதுக்கடைகளால் வரித்துறையினர், வரித்துறை அமைச்சர் மற்றும் மாநில அரசும் பணத்தை ஈட்டுவதில் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண முடிகிறது. இதனால் ஒருவர் உயிரிழந்தால் ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது அவ்வளவுதான்.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருப்பதால் ஆண்டுக்கு 1.5 லட்சம் மக்கள் உயிரிழக்கும் நிலையில், பொதுமக்களின் நலனுக்கு உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.

பல மாநிலங்களில் சாலையோரங்களில் மதுக்கடைகள் அகற்றப்படாததால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் அதிகரிக்கிறது. நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அமைத்து மது விற்பதற்கு ஏற்கத்தக்க காரணம் எதையுமே மாநில அரசுகளால் சொல்ல முடியாது.

இவ்வாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் படிக்க