• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம், பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

December 6, 2016 தண்டோரா குழு

முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி டிசம்பர் 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை (5ம் தேதி) இரவு 11.30 மணிக்குக் காலமானார் என்பதைத் தமிழக அரசு மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. இதையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்படும்.

இந்த நாட்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் இந்த 7 நாட்களும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழக சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க