• Download mobile app
28 Jun 2026, SundayEdition - 3791
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்கார் திரைப்பட டிக்கெட் அதிக விலைக்கு விற்றால் தியேட்டர் உரிமம் ரத்து- உயர்நீதிமன்றம் அதிரடி!

November 1, 2018 தண்டோரா குழு

சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்,நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் சர்க்கார் திரைப்படம் திரைக்கு வர உள்ளது.இந்நிலையில்,மதுரை மாவட்டத்தில் சில தியேட்டர்களில் சர்கார் திரைபடத்திற்கு தியேட்டர் விலையை விட பலமடங்கு அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இவ்வழக்கினை இன்று விசாரணைக்கு கொண்டு வந்த மதுரை உயர்நீதிமன்றம்,சர்கார் திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் பற்றி தணிக்கைக்குழு ஆய்வு செய்யவேண்டும் என்றும்,டிக்கெட் கட்டணத்தை கண்காணித்து,மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க